IPL 2021 – RR vs MI: அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி தனது அதிரடியான ஆட்டத்தினால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.
எளிய இலக்கு:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 51 வது நாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணி இந்த வருடம் தொடக்கம் முதல் சரிவை சந்தித்து வந்துள்ளது. கண்டிப்பாக வெற்றியை பெற வேண்டிய நிலையில் மும்பை அணி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதனால் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான லூயிஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் மற்றும் ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சாம்சன் 3 ரன்களும், சிவம் துபே 3 ரன்கள், பிலிப்ஸ் 4 ரன்கள் என்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை மேட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் வீரர்கள் பேட்டிங்கில் இன்று மிகவும் சொதப்பியுள்ளனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தனர். இதனால் அடுத்து களம் இறங்கும் மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் மற்றும் கிஷன் இருவரின் கூட்டணியும் அபாரமாக ஆடியது. இஷன் கிஷன் 25 பந்துகளில் அரை சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் 22 ரன்கள், சூர்யகுமார் 13 ரன்கள், ஹர்டிக் 5 ரன்கள் 8என்று .2 ஓவர் முடிவிலேயே மும்பை அணி 94 ரன்களை எடுத்தது. ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மும்பை மீதம் 70 பந்துகள் உள்ள நிலையிலேயே இலக்கை தொட்டு அபார வெற்றியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.