தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 1,449 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் பாதிப் நிலவரப்படி இன்று மட்டும் புதிதாக 1,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு அளித்துள்ள அறிக்கையில் முழு விவரங்களையும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே பெரும் நிம்மதி அளிக்கிறது. தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இன்றைய அறிக்கையின் படி தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
IPL 2021 – RR vs MI: மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்கு!
இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 26,71,411 ஆக அதிகரித்துள்ளது. தமிழக மாவட்டங்களில் இன்று மட்டும் புதிதாக 16 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த தொற்று பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை 35,682 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 1,548 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,18,980 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நவ.1ம் தேதி 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இன்றைய மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16,749 பேர் தற்போது தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,46,735 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 4,77,45,420 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 179 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,50,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.