
ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. மாதந்தோறும் அக்கவுண்ட் தேடி வரும் வட்டி.. கண்டிப்பா இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!!
இன்றைய காலக்கட்டத்தில் தனிநபர் ஒருவர் சேமிக்க விரும்பினால் அதற்கு பல்வேறு விதமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில் வங்கிகள், தபால் நிலையங்கள், LIC நிறுவனங்களில் ஏராளமான சேவிங்க்ஸ் ஸ்கீம்களில் ஏதேனும் ஒரு சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். அதேபோல் போஸ்ட் ஆபீஸில் நல்ல வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டம் ஒன்றை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இனி ராணுவத்தில் மனித உருவ ரோபோக்கள்.. தீவிர ஆராய்ச்சியில் DRDO.. வெளியான முக்கிய தகவல்..!!
அதாவது, “போஸ்ட் ஆபீஸில் மாதாந்திர வருமானத் திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் தொடர் வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதல் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்காக தொடங்க விருப்பினால் ரூ. 15 லட்சம் வரை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யலாம். அதற்கு 7.4 % வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்யும் பணத்திற்கு மாதாந்திர வருமானமாக ரூ. 9,250-யும், ஆண்டுக்கு ரூ. 1,11,000-யும் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை அப்படியே இருக்கும் என்றும், முதிர்வுக்கு பிறகு கணக்கை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்க திட்டம் என்பதால் உங்கள் முதலீடு தொகை பாதுகாப்பானதாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.























