தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. அதனால் டெங்கு ஒழிப்பு பணியில் 21695 பணியாளர்கள் ஈடுபடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு:
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் டெங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருக்கின்றன. இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மாநிலம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆதார் கார்டினை இலவசமாகவே அப்டேட் செய்யலாம் – டிச.14 வரை கால அவகாசம் !
மேலும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுடன் கொசு ஒழிப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்த அவர், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.