ஆதார் கார்டினை இலவசமாகவே அப்டேட் செய்யலாம் – டிச.14 வரை கால அவகாசம் !

0
ஆதார் கார்டினை இலவசமாகவே அப்டேட் செய்யலாம் - டிச.14 வரை கால அவகாசம் !
ஆதார் கார்டினை இலவசமாகவே அப்டேட் செய்யலாம் - டிச.14 வரை கால அவகாசம் !
ஆதார் கார்டினை இலவசமாகவே அப்டேட் செய்யலாம் – டிச.14 வரை கால அவகாசம் !

ஆதார் கார்டினை இலவசமாக அப்டேட் செய்வதற்கு தற்போது டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் அப்டேட்

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஆவணமாக விளங்கி வருகிறது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டுமெனில் கட்டாயமாக குடிமக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் கார்டினை அப்டேட் செய்யும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஆதார் கார்டில் முகவரி, புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்வதற்கு டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை – செப்.17 வரை உஷார்! – வானிலை மையம் எச்சரிக்கை!

இந்நிலையில், தற்போது பொதுமக்கள் my aadhaar என்கிற போர்ட்டல் வழியாக ஆதார் தகவல்களை இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். ஒருவேளை நேரடியாக ஆதார் சேவை மையங்களுக்கு சென்று ஆதார் கார்டில் ஏதேனும் அப்டேட் செய்ய விரும்பினால் ரூ.25 கட்டணமாக செலுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி இலவசமாக ஆதார் அப்டேட் செய்வது என்பதை பார்க்கலாம்.

  1. முதலில், my aadhaar போரட்டலில் உள்ள மை ஆதார் என்கிற பக்கத்தை தேர்வு செய்யவும்.
  2. பின்னர், உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுத்து உங்களது மொபைல் எண்ணிற்கு வந்துள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்யவும்.
  3. பின்னர், புதுப்பிப்பு புள்ளிவிவரங்கள் தரவு என்பதை கிளிக் செய்து தேவையான மாற்றத்தை செய்து கொள்ளலாம்.
  4. இதன் பின்னர், URN எண்ணை பயன்படுத்தி ஆதார் அப்டேட்டின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!