
திடீரென ஸ்லீப்பர் வகுப்பை போல மாறி வரும் ஏசி வகுப்பு.. !! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
சாலைப் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக ரயில் போக்குவரத்து மிகவும் எளிதான மற்றும் ஆற்றலுடைய ஒன்றாக மக்களிடையே கருதப்படுகிறது. மேலும், முன்னதாக ரயிலில் ஏசி வகுப்பில் பயணிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், ஏசி வகுப்பில் டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் வெகுவாக அதிகரித்து வரும் ஏசி வகுப்பு பயணம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏசி வகுப்பில் இருந்து கிடைக்கும் வருவாய் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் சமநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே பெற்ற மொத்த வருவாய் ரூ.80000 கோடியில், ஏசி வகுப்பு வருவாய் மட்டுமே ரூ.50669 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம், ஏசி வகுப்பு பயணிகளிடமிருந்து கிடைத்த வருவாய் 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், 2019-20 ஆம் ஆண்டில், ஏசி வகுப்பில் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 18 கோடியாக இருந்த நிலையில் 2024-25 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 38 கோடியாக இருக்கும் என்றும், இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 727 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது”.























