100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – புள்ளிபட்டியலில் முதலிடம்!!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29 வது லீக் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் மோதிக்கொண்டனர். இதில் முதலாவதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்ததினால் இந்திய அணியினர் முதலில் களமிறங்கினர். இந்த லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 110 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். அதனால் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை பெற்றது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதனால், இங்கிலாந்து அணியினருக்கு வெற்றி இலக்காக 230 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி யாருமே எதிர்பார்க்காத நிலையில் 34.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அடுத்த வெற்றியினை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, இந்திய அணி 5 வெற்றிகளை பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது இங்கிலாந்து அணியையும் கடுமையாக வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால், இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.