ஜாம்ஷெட் ஜே இரானி காலமானார் – இந்தியாவின் எஃகு மனிதர்!
இந்திய நாட்டின் தோழில்துறையில் முக்கிய நபராக விளங்கிய ஜாம்ஷெட் ஜே இரானி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார்.
ஜே இரானி:
நாட்டின் தொழில்துறையில் முக்கிய தூணாக விளங்கியவர் ஜாம்ஷெட் ஜே இரானி. இவர், நாக்பூரில் 1936ம் ஆண்டு ஜிஜி இரானி மற்றும் கோர்ஷெட் இரானி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 1968 ல் இருந்து டாடா நிறுவனத்தில் அடிமட்ட பதவியில் இருந்து 1992 ல் மேலான் இயக்குநராக உயர் பதவி வரை வகித்தவர்.2007 ம் ஆண்டு மத்திய அரசு ஜே இரானி அவர்களுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தது.
ட்விட்டரில் வர இருக்கும் புதிய மாற்றம் – எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கை!
Exams Daily Mobile App Download
இவர் இந்தியாவின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் பெருமை பெற்றவர். உடல்நல குறைவு காரணமாக இவர் முன்னதாக ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 86 வயதான ஜே இரானி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று (அக்டோபர் 31) இரவு 10 மணிக்கு அவர் இயற்கை எய்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறப்புக்கு முக்கிய தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.