ட்விட்டரில் வர இருக்கும் புதிய மாற்றம் – எலான் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கை!
ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள எலான் மஸ்க் பயனர்களின் கோரிக்கையை ஏற்று புதிய மாற்றம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அப்டேட்:
ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பயனர்கள் தெரிவிக்க முன்னதாக அதிகபட்சம் 280 எழுத்துக்கள் தான் பயன்படுத்த முடியும். குறைந்த அளவில் தங்களின் கருத்துக்களை எளிமையாக, அழகாக சொல்ல முடிவதில் தான் சுவாரஸ்யம் இருப்பதாக பலரும் ட்விட்டர் குறித்து கூறுவார்கள். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் வாங்கிய எலான் மஸ்க் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நீட் முதுநிலை 2022 கலந்தாய்வு 2ம் சுற்று முடிவுகள் – இன்று (நவ 1) வெளியீடு!
Exams Daily Mobile App Download
முக்கிய தலைமை பொறுப்பு அதிகாரிகளை நீக்கியது போல், நிறுவனத்தின் கால்வாசி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். ஆனால் ட்விட்டர் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ட்வீட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 280-ல் இருந்து அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அப்டேட் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.