நாடு முழுவதும் ஜனவரி 2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் நடந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் முதற்கட்ட சோதனை வெற்றிகண்டுள்ளது. தமிழகம் உட்பட பிற அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2-ஆம் தேதி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை பணிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி பணிகள்:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உயிர்கள் பறிபோனது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் நோயை தடுக்க தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வெற்றிகண்டுள்ளனர்.
பொங்கல் பரிசு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு கோரிக்கை!!
இதேபோல் இந்தியாவும் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து, ஆய்வக சோதனையில் வெற்றி கண்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக மக்களுக்கு செலுத்தும் ஒத்திகை பணிகளை தொடங்கியுள்ளது. அதில் முதலில் அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் டிசம்பர் 28,29 தேதிகளில் தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையை 2 மாவட்டங்களாக பிரித்து தொடங்கியது. அதன்படி, இந்த ஒத்திகை நடவடிக்கை என்பது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதும் ஏற்படக்கூடிய பாதகமான நிகழ்வுகளை நிர்வகிப்பதை மையமாக கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை முறைகேடு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் புது உத்தரவு!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளது. அடுத்தகட்டமாக ஜனவரி 2-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடவடிக்கை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 3 கட்டங்களங்களாக ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |