கொரோனா நோயாளிகளுக்கு 4,400 ரயில் பெட்டிகள் தயார் – ரயில்வே அமைச்சகம்!!

0
கொரோனா நோயாளிகளுக்கு 4,400 ரயில் பெட்டிகள் தயார் - ரயில்வே அமைச்சகம்!!
கொரோனா நோயாளிகளுக்கு 4,400 ரயில் பெட்டிகள் தயார் - ரயில்வே அமைச்சகம்!!
கொரோனா நோயாளிகளுக்கு 4,400 ரயில் பெட்டிகள் தயார் – ரயில்வே அமைச்சகம்!!

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ரயில் பெட்டிகளை தயார் செய்துள்ளது. 4,400 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில் பெட்டிகள்:

கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயளிகள் மருத்துவமனை வாசலில் படுக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. மேலும் மருத்துவர், செவிலியர்கள், மருந்து பொருட்கள், சுவாச கருவிகள் போன்றவற்றிற்கு அதிக பற்றாக்குறை நிலவுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் நோயாளிகளை தனிமைப்படுத்த ரயில் பெட்டிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக நாகலாந்து, குஜராத் ஆகிய மாநிலங்கள் கோரிக்கை வைத்திருந்தன. அதனால் சபர்மதி, சந்த்லோதியா மற்றும் திமாபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், 4000 படுக்கைகளுடன் 232 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதனால் அதிக நோயளிகளை மருத்துவ உதவிகளுடன் தனிமைப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை கூறுகிறது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – அறிவிப்பு எப்போது?

மேலும் இதற்காக ரயில் பெட்டிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் மருத்துவ வசதிகள் அனைவர்க்கும் கிடைக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. தற்போது வரை சுமார் 70,000 படுக்கை வசதிகளுடன் 4,400 ரயில் பெட்டிகளை ஏற்பாடு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!