நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – அறிவிப்பு எப்போது?
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அணைவரும் மீண்டும் ஊரடங்கு எப்போது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
மீண்டும் ஊரடங்கு :
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காட்டு தீ போல பரவி வருவதால் மத்திய அரசு கொரோனா தடுப்பு பணிகளை விரைந்து செய்து வருகிறது. மாநிலங்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பு அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. தற்போதைய இரண்டாம் கொரோனா பரவல் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் பல நாடுகளும் முழு ஊரடங்கு அவசியம் என கூறி வருகின்றன.
அதனால் பலரும் இந்தியாவுக்கு மீண்டும் ஊரடங்கு எப்போது? என்று வினா எழுப்பி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,12,262 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3980 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த கடுமையான பாதிப்பால் சுகாதாரத்துறை ஊரடங்கு அவசியம் என அரசிற்கு அறிவுறுத்தி வருகிறது. முழு ஊரடங்கால் வணிகர்கள் பாதிப்படைந்தாலும், உயிரிழப்புகளை கருத்திற்கொண்டு அவர்களே ஊரடங்கு அமல்படுத்துபடி கூறுகின்றனர்.
காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை – மாநில அரசு அறிவிப்பு!!
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா 3ம் அலை வரும் என எச்சரித்துள்ளார். இப்படி கவலைக்கிடமான சூழ்நிலையில் மத்திய அரசு தடுப்பூசிகளை மக்களுக்கு அளிக்காமல் காலம் தாழ்த்துகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். 3.5 கோடி பேர் அதற்கு முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் 62,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தொற்று பலமடங்கு அதிகமாகியுள்ள நிலையில் அரசு எப்போது நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்