காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது என பீகார் மாநில அரசு அவர்களுக்கான விடுப்பை தடை செய்துள்ளது.
விடுப்பிற்கு தடை:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நோய் பரவலை தடுக்க ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் பரவல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மக்களை காக்க சுகாதார பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர் முன்கள பணியாளர்களாக இருந்து பணி செய்து வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் அவசர உதவிக்கும் சட்ட ஒழுங்கை காப்பதற்கும் காவல்துறையின் பணி இன்றியமையாதது ஆகும்.
தமிழக அரசு அலுவலகங்களில் 50% பணியாட்கள் மட்டுமே அனுமதி – இன்று முதல் நடைமுறை!!
இவர்கள் இரவு, பகல் பாராது சாலைகளில் நின்று சேவை செய்து வருகின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் காவல்துறையின் பணி மிக அவசியம் என்பதால் பீகார் மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விடுப்பை தடை செய்துள்ளது. மிக அவசர தேவைகளுக்கு மட்டும் விடுப்பு வழங்கப்படும் என பீகார் மாநில காவலர்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்