தமிழக அரசு அலுவலகங்களில் 50% பணியாட்கள் மட்டுமே அனுமதி – இன்று முதல் நடைமுறை!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் மட்டும் இன்று முதல் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, மே 6 முதல் அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் 50 சதவிகித பணியாளர்கள் மட்டுமே பணி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது குறித்து வெளியிட்ட அறிவிப்பின் படி, குரூப் எ பிரிவில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும். மற்றவர்கள் சுழற்சி முறையில் அல்லது வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு துறை வெளியீடு!!
மேலும் வீட்டில் இருந்தே பணியாற்றும் ஊழியர்கள் தேவை அடிப்படையில் அலுவலகங்களுக்கு செல்லலாம். அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என உத்தரவிப்பட்டுள்ளது.