நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவி வருவதால் நாளை பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலமாக மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் நாடு தழுவிய முழு ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு குறித்த அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக லட்ச கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் ஒரு நாள் இறப்பு 3000யை கடந்து பதிவாகியுள்ளது. பலர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்துள்ளனர். இதனை சரி செய்ய மத்திய அரசு ஆக்சிஜன் ஆலைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தடுப்பூசி முன்பதிவிற்கு கோவின் வலைதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மே 3 முதல் ஜூன் 6 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் தற்போது அனைத்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளார். ரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட பல துறை சார்ந்த அமைச்சர்கள் அதில் கலந்து கொள்ள உள்ளனர். அதில் நாடு தழுவிய பொது முடக்கம், ஆக்சிஜன் மருந்து பொருள்கள் தடையின்றி எடுத்து செல்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.