நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு பரிசீலனை!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாக பரவி வருவதால் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3500 க்கு மேல் பதிவாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இந்தியா உள்ளதாக அமெரிக்கா மருத்துவ பல்கலை தெரிவித்துள்ளது. மேலும் இதே நிலைமை தொடர்ந்தால் அடுத்த மாதம் 11 ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் – AICTE எச்சரிக்கை!!
இருந்த போதிலும் நாடு முழுவதும் முழு முடக்கம் மட்டுமே தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து மக்களை காக்க முழு ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அது குறித்து விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.