கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் – AICTE எச்சரிக்கை!!

0
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் - AICTE எச்சரிக்கை!!
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் - AICTE எச்சரிக்கை!!
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் – AICTE எச்சரிக்கை!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் நிலைமை சரி செய்யும் வரை அனைத்து கல்லூரிகளும் மாணவர்களை கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என AICTE தெரிவித்துள்ளது.

கட்டணம் குறித்த அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. நிலைமையை சரி செய்ய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கல்லூரி தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக பல கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதிக்காமல் உள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நேரத்தில் இது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – அறிவிப்பு எப்போது?

இதனால் பல மாணவர்கள் கல்வி படிப்பை தொடராமல் உள்ளனர். இதனை சரி செய்யும் நோக்கியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நிலைமை சரி செய்யும் வரை அனைத்து கல்லூரிகளும் மாணவர்களை கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது. மேலும் அதனை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!