IND vs SA 3rd T20 : மழையால் ஆட்டம் தடைபெற வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் தலா 1 வெற்றி பெற்றுள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆட்டம் செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நாளை (நவம்பர் 13) நடைபெற உள்ளது.
தமிழக பள்ளியில் திரையிடப்பட்ட கோட், வேட்டையன் படங்கள்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை.. விவரம் உள்ளே!!
இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின் படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 26 C மற்றும் குறைந்தபட்சம் 20 C வானிலையில் மாற்றம் காணப்படும். மேலும் 15 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆட்டம் நடைபெறும் நாள் முழுவதும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























