தமிழக பள்ளியில் திரையிடப்பட்ட கோட், வேட்டையன் படங்கள்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை.. விவரம் உள்ளே!!
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த நவம்பர் 9ம் தேதி ‘கோட்’ மற்றும் ‘வேட்டையன்’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் விஜய்யின் கோட் படத்திற்கு ரூபாய். 25ம், ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திற்கு ரூபாய்.10ம் மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்.. ஐ.ஐ.டி. மெட்ராஸ் 3ம் இடம்!!
இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்றனர். அப்பொழுது இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணையில், மாணவிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சினிமா திரையிடப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் சினிமா திரையிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



























