IND vs ENG 2வது டெஸ்ட் – ரோஹித் மற்றும் ராகுல் கூட்டணி சதமடித்து 69 வருட சாதனை முறியடிப்பு!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் KL ராகுல் கூட்டணி இணைந்து 69 வருட சாதனையை முறியடித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகள்:
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இடைவிடாத மழையால் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் தலா 2 புள்ளிகள் அபராதமாக பெறப்பட்டது. எனவே முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் முழு வீச்சில் தயாராகி உள்ளது.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ நாளை ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய நேரப்படி 3.45 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ராகுல் இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து சீரான வேகத்தில் ஆடி வந்தனர். இருவரும் இணைந்து ஆட்டத்தில் அடுத்தடுத்து ரன்களை குவிக்க தொடங்கினார்கள். ரோஹித் ஷர்மா தனது சதத்தை அடித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஜிம்மி ஆண்டர்சன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். ரோஹித் 83 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார்.
TN Job “FB Group” Join Now
இதனால் இறுதியாக 1952 ம் ஆண்டு இறுதியாக இந்திய வீரர்கள் வினோ மன்கட் மற்றும் பங்கஜ் ராய் ஆகியோரின் சாதனையை 69 ஆண்டுகளுக்கு பின்னர் முறியடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து க்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தனர். தற்போது, ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் இணைந்து தொடக்க ஆட்டக்காரரர்களாக இருந்து 126 ரன்களை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.