நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ நாளை ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
தமிழ்த்திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்ணாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் நாளை ஓடிடி திரையில் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நெற்றிக்கண்:
கடந்த 2017ம் ஆண்டு திகில் திரைப்படமான ‘அவள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமான மிலிந்த் ராவ் அறிமுக இயக்குனராக இருக்கும் போதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது தனித்திறமையாலும், கதை தேர்வுசெய்யும் பணியினாலும் திரை உலகின் உச்சத்தில் உள்ளார். கதையின் நாயகிகளுக்கு என்று எந்த வித முக்கியத்துவமும் கொடுக்கப்படாத காலகட்டத்தில் கதாநாயகியை மட்டுமே நம்பி எடுக்கும் திரைப்படங்கள் உருவாவதற்கு வித்திட்டவர்.
தமிழகத்தில் இன்று 1,942 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிக்கை!
இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களை அசரடிக்கும் விதத்தில் புதுமையை செய்து விடுவார். இதனால் நயன்தாராவின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அவள் படத்தின் இயக்குனர் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரை படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
நெற்றிக்கண் திரைப்படத்தின் டிரெய்லர் முன்னதாக ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், கதை பரபரப்பாக நகர்வது போல் உள்ளது. தொடர்ந்து பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை பார்வையற்ற நயன்தாரா கண்டுபிடிப்பது போல் விறுவிறுப்பாக கட்டப்பட்டுள்ளது. சைக்கோ கில்லராக அஜ்மல் நடித்துள்ளார். நயன்தாராவின் புதுவிதமான இந்த அவதாரத்தை பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், நாளை(ஆகஸ்ட் 13) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மதியம் 12:15 க்கு திரைப்படம் நேரடியாக வெளியாகிறது.