தமிழகத்தில் இன்று 1,942 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக கொரோனா தொற்று கிட்டத்தட்ட 2,000 பேர்களை ஒட்டி உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று மட்டும் 1942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து கொரோனா 2ம் அலை முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மாநில அரசும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளையும் அளித்து வந்தது. ஆனால் மக்கள் தளர்வுகளை முறையாக பயன்படுத்தாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொள்வதால் தொடந்து சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இதனால் நிலைமை தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
5 ஆண்டுகளில் 10,000 புதிய வேலைவாய்ப்புகள் – ரூ .1,600 கோடி முதலீட்டில் PwC இந்தியா!
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1942 பேருக்கு இன்று தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,83,036 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை 3,21 கோடியே 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 20,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 33 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மாநிலத்தில் 34,428 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 1,892 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் 25,28,209 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.