5 ஆண்டுகளில் 10,000 புதிய வேலைவாய்ப்புகள் – ரூ .1,600 கோடி முதலீட்டில் PwC இந்தியா!
உலக அளவில் வணிக நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான பிடபிள்யூசி இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1,600 கோடி முதலீடு செய்வதன் மூலம் நாட்டில் புதிதாக 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்பு:
ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்பது ஒரு பன்னாட்டு தொழில்முறை சேவைகள் நிறுவனம் ஆகும். இது PwC என்று அளிக்கப்படுகிறது. PwC உலகின் இரண்டாவது பெரிய தொழில்முறை சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் வணிக நிறுவனங்களுக்கு வணிக தோதான உறுதி, வரி ஆலோசனை, தகவல் மற்றும் ஆய்வு,மேலாண்மை ஆலோசனை மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றை வழங்குகிறது.
வங்கி ஊழியர்களுக்கு DA உயர்வு? – சம்பள உயர்வு விகிதம் குறித்த தகவல்கள்!
இந்த நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா வலுவான பொருளாதார அடிப்படைகளைக் கொண்டுள்ளது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தவும், மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவும் அதிகரிக்க புதிய முயற்சியை செய்து வருகிறோம் என்று PwC தலைவர் சஞ்சீவ் கிரிஷன் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், அடுத்து வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் PwC ரூ .1,600 கோடி வரை முதலீடு செய்து 10,000 க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை டிஜிட்டல், கிளவுட், சைபர், பகுப்பாய்வு ஆகிய துறைகளில் வளரும் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஏற்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்தியாவில் சுமார் 15,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் நிறுவனம், மக்கள் மற்றும் பங்குதாரர்களை மேம்படுத்த நிறுவனத்தின் வருவாயில் குறைந்தபட்சம் 1% செலவழிக்க முடிவு செய்துள்ளது.