தமிழக கல்லூரிகளில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – அரசின் சூப்பர் திட்டம்!

0
தமிழக கல்லூரிகளில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - அரசின் சூப்பர் திட்டம்!

தமிழக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார். இது குறித்த சிறு தொகுப்பு இங்கு காண்போம்.

மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:

தமிழக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, அதன்பின் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும்  மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதன் விளைவாக அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் என்று பயணிக்கும் திட்டத்தின் விளைவாக பேருந்துகளில் பெண்களின் பங்களிப்பு  40 சதவீதத்தில் இருந்து 65% உயா்ந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம்  தமிழகத்தில் உள்ள 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 16.85 லட்சம் மாணவா்கள் பயனடைகின்றனா். மாணவா்களின் ஊட்டச்சத்து அதிகரிப்பது மட்டுமன்றி, மாணவா்களின் வருகைப் பதிவும், கற்றல் விளைவுகளும் இந்த திட்டத்தால் மேம்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!