தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிப்பு – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தேர்வுகள் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. மற்ற அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. தேர்வு முறையினால் மாணவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், அரசு மாணவர்களின் நலன் கருதி இறுதி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!
கொரோனா அதிகரிப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடக்கிறது. மற்ற வகுப்புகளுக்கு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 ம் தேதி முதல் 21ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக பள்ளிகள் அளவிலேயே செய்முறைத் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் பள்ளிக்கு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அரசு தேர்வுகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதன் படி, பொதுத்தேர்வு தொடர்பான பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிக்குள் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு அதிக தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Why you are stressing Parents and students.
You are risking the lifes of 12th std students