
தமிழகத்தில் உள்ள நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு…!! அமைச்சர் கே.என் நேரு வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் கே. என் நேரு நகராட்சி நிர்வாகத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சி மற்றும் 31 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி செலவில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, “இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய பேருந்து நிலையம், புதிய சந்தைகள், நீர்நிலைகள் தூர்வாரல், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அலுவலகங்கள் கட்டுதல், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், கரூர் மற்றும் திருச்சி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.























