ஆதார் பதிவிறக்கம் செய்யும் முன்பாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் – மிஸ் பண்ணினா பிரச்சனை தான்!
ஆதார் நாட்டின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படும் நிலையில், இதனை நாம் வெளி இடங்களில் பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஆதார் அட்டை:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட 12 இலக்க எண்களை உள்ளடக்கிய அடையாள அட்டையை வழங்கியுள்ளது. ஒவ்வொருவரின் அட்டையிலும், பெயர், வயது, முகவரி மற்றும் பயோ மெட்ரிக் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள மற்ற அடையாள ஆவணங்களான வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், பான் அட்டை, சிலிண்டர் கணக்கு போன்ற அனைத்து எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆதார் அட்டை மிகவும் முக்கியமான அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணமாக விளங்குகிறது. எனவே, ஆதார் அட்டையை கவனமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அடுத்தவர்களின் ஆதார் அட்டையினை வைத்து மோசடி கும்பல்கள் சில மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகி விடுகிறது. இதனால் ஆதார் மையம் அதிகாரபூர்வமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!
Exams Daily Mobile App Download
அதன்படி, பொது இடங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் போது உடனே அதற்கான விவரங்களை நீக்கி விட வேண்டும் என்று அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இல்லையென்றால் நமது 12 இலக்க ஆதாரில் முன்னதாக உள்ள 8 எண்கள் மறைக்கப்பட்டு உள்ள மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்