ரயில் ஓட்டுனர்களுக்கு இதற்கெல்லாம் தடை – அதிரடி உத்தரவு!
ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் ரயில் ஓட்டுனர்களுக்கு முக்கிய உத்தரவை விதித்துள்ளது.
அதிரடி உத்தரவு:
சமீபத்தில் ஒரிசாவில் 3 ரயில்கள் எதிர்பாராத விதமாக மோதி மிகப்பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதனை அடுத்து ரயில்வே நிர்வாகம் ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு முக்கிய முன்னெச்சரிக்கை உத்தரவுகளை அளித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பவர் கட் – மின் வாரியம் வெளியிட்ட அப்டேட்!
அதன்படி, ரயில் ஓட்டுனர்கள் (லோகோ பைலட்டுகள்) பணியில் உள்ள போது செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தாலும் அதனை அருகில் வைத்திருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர்களின் கவனம் மற்றும் இயக்கும் திறன் போன்றவை தொடர்ந்து சோதிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.