வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இ-சர்டிபிகேட் வழங்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆதார் – வாக்காளர் அட்டை:
இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இப்பணியானது நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியை 2023 க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. நேரடியாகவும், தேசிய வாக்காளர் சேவை இணையத்தளம் வாயிலாகவும் அத்துடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பை செய்ய மக்களை ஊக்குவிக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு இ-சர்டிபிகேட் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை – இதற்காக தான்! முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இராணிபேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ- மாணவிகளை ஊக்குவித்து இ-சர்டிபிகேட் பெற வைக்க கல்லூரி முதல்வர்கள் முன் வர வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு இ-சர்டிபிகேட் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் விரைந்து ஆதார் எண்ணை இணைத்து இ-சர்டிபிகேட் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்