
மகளிர் உரிமை தொகை குறித்து சற்று முன் வெளியான முக்கிய தகவல்…!! இனி பெண்கள் காட்டுல ஒரே மழை தான்..!!
பெண்கள் தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றி கொள்வதை நோக்கமாக கொண்டு “மகளிர் உரிமை தொகை” திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில் பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது இத்திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உங்களுக்கு இலவச தையல் மெஷின் வேணுமா..? அப்போ இத மட்டும் பண்ணுங்க..!!
அதாவது, இத்திட்டத்திற்கு யார் எல்லாம் தகுதியானவர்கள் யாருக்கெல்லாம் இந்த உரிமைத்தொகை கிடையாது என்பது குறித்து கீழே விரிவாக காண்போம். ஏனெனில், இன்னும் இரண்டு மாதங்களில் இத்திட்டமானது விரிவு படுத்த பட உள்ளது. எனவே, இப்போதே யாரு எல்லாம் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதை தெரிந்து கொண்டு, உங்கள் ரேஷன் அட்டையில் உள்ள சிக்கலை தீர்ப்பதே சாலச்சிறந்தது ஆகும்.
அதாவது, இத்திட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இனி ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவி இல்லை என்றாலும் அக்குடும்பத்தில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணிற்கு அந்த உரிமைத்தொகையானது வழங்கப்பட உள்ளது. மேலும், விவாகரத்து பெற்றோர், அதே போல் புதிதாக திருமணமான பெண்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.ஆனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் விண்ணப்பிக்கும் போது மற்றொருவரின் கோரிக்கை நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

























