தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு போடப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.
ரேஷன் கார்டுதரர்களுக்கு முக்கிய உத்தரவு:
அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டுகள், அரசாங்கத்தால் அந்த்யோதயா குடும்பங்களாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயாரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18.6 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளும் 95.6 6 லட்சம் முன்னுரிமை கார்டுகளும் உள்ளன. இந்த கார்டுகளும் மத்திய அரசு அரிசி, மாநில அரசு அரிசி என தனித்தனியாக பிரித்து ரசீது பதிவு செய்யப்படுகிறது.
CIPET நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
முன்னுரிமை மற்றும் அந்த்யோதயா கார்டில் உள்ள நபர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை மத்திய மாநில அரசுகள் வழங்குகின்றன. இதில் தற்போது வரை அந்த்யோதயா கார்டுகளில் 65.47 லட்சம் பேரும், முன்னுரிமை கார்டுகளில், 2.99 கோடி பேரும் உறுப்பினராக உள்ளனர். இவர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதனால் ரேஷன் கார்டுகளில் முன்னுரிமை மற்றும் அந்த்யோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விரல் ரேகையையும் விரல் ரேகை பதிவு செய்த ஆதார் வழியாக உறுதி செய்ய முதல் விடப்பட்டுள்ளது. இதுவரை 66% விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களின் விவரங்களை 29ஆம் தேதிக்குள் முடிக்க ரேஷன் ஊழியர்களுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது இது தொடர்பாக ரேஷன் கார்டு வீட்டிற்கு சென்றே விவரங்களை சரிபார்க்கவும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.