முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 29
உலக இதய தினம்
- உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- இதயம் அனைத்து நலத்துக்கும் இதயம் போன்றது. உலகில் மரணத்துக்குப் பெரும் காரனமாக இருக்கும் இதய இரத்தக் குழல் நோய்களைப் பற்றி மக்களுக்குக் கூற உலக இதய அமைப்பு உலக இதய தினத்தைக் கடைபிடிக்கிறது.
- இதய நோய் ஆபத்தைக் குறைக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விழிப்புணர்வை இந்நாள் ஊக்குவிக்கிறது.
- மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதனுடன் தொடர்புடைய வேறு எந்த நிபந்தனையுமின்றி எந்தவொரு இதய நோய்களையும் தவிர்ப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை ஊக்குவிப்பதற்கு இந்த நாள் நினைவூட்டுகிறது.
அரங்க சீனிவாசன் பிறந்த தினம்
- இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் ‘கவித்தென்றல்’ எனப் புகழப்பட்டவருமான அரங்க சீனிவாசன் (Aranga Srinivasan) செப்டம்பர் 29 ,1929 ஆம் ஆண்டு பிறந்ததார்.
- ‘வைணவத் தத்துவ அடிப்படைகள்’, ‘தியாக தீபம்’, ‘வழிகாட்டும் வான்சுடர்’, ‘சுதந்திரப் போரின் எழுச்சிக் களம்’, ‘அகமும் புறமும்’, ‘தாகூர் அஞ்சலி’, ‘சுய சரிதை நூல்’, ‘தேசிய கீதம்’, ‘நீலிப்பேயின் நீதிக்கதைகள்’, ‘திருவரங்கத் திருநூல்’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
- ‘தினமணி’ நாளிதழில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைக் கவிஞராகவும் செயல்பட்டுள்ளார்.
- தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, ‘தமிழ்க் கலைக் களஞ்சியம்’ உருவாக ஒத்துழைத்தார்.
- ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி என்றெல்லாம் போற்றப்பட்டவர். தமிழ்ப் படைப்புலகில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அரங்க சீனிவாசன் 1996-ம் ஆண்டு 76-ம் வயதில் மறைந்தார்.