தேசிய கைத்தறி தினம்
- நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசியக் கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- தேசியக் கைத்தறி தினம் 2015ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நிய துணிகளை புறக்கணிக்கும் விதமாக ‘சுதேசி இயக்கம்’ 1907ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கப்பட்டது.
- அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமான கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்
பிறப்பு:
- ஆகஸ்ட் 7, 1925ல் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்தார்.
சிறப்பு:
- மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்தியாவின் சிறந்த உயிரியல் அறிவியலாளர்.இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார்.
- இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர்.
- எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் என்னும் நிறுவனத்தின் அமைப்பாளர்.
- இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர்.
- வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.
விருதுகள்:
- இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
- தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர்.
- பெருமைமிகு மகசேசே விருது பெற்றவர்.
- கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது பெற்றவர்.
இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்
பிறப்பு:
- மே 7, 1861ல் பிறந்தார்.
சிறப்பு:
- புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளர்.
- விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார்.
- அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன.
- இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”, இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது.
- 1877ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன.
விருதுகள்:
- 1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக நோபல் பரிசு வென்று ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர்.
- ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
இறப்பு:
- ஆகஸ்ட் 7, 1941 ல் இறந்தார்.
வாணிதாசன் நினைவு தினம்
பிறப்பு:
- ஜூலை 22, 1915ல் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார்.
பெற்றோர்: அரங்க திருக்காமு, துளசியம்மாள்
இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு
சிறப்பு:
- புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.
- இவர் ‘ரமி’ என்னும் புனைப்பெயர் கொண்டவர்.
- இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
- இவரின் பாடல்கள் சாகித்திய அகாதமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
- இவர் “தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
- பிரெஞ்சு குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
- இவரின் முதல் பாடல் பாரதி நாள்.
- பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
- சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்.
- குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே. ‘கவிஞரேறு’, ‘பாவலர் மணி’ முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
- தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
வேறு பெயர்கள்:
- புதுமைக் கவிஞர்
- பாவலரேறு
- பாவலர்மணி
- தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
- தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
நூல்கள்:
- கொடிமுல்லை
- இன்ப இலக்கியம்
- பொங்கல் பரிசு
- இரவு வரவில்லை
- வாணிதாசன் கவிதைகள்
- இனிக்கும் பாட்டு
இறப்பு:
- ஆகஸ்ட் 7, 1974ல் இறந்தார்.