TN Weather Update: தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!!
கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் “ஏப்ரல் 24 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியின் பயணம் ரத்து.. வெளியான முக்கிய தகவல்..!!
மேலும், ஏப்ரல் 24 மற்றும் 26 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (24-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.


























