தமிழகத்தில் இன்று இந்தந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!!
கடந்த வாரம் மே 13 ஆம் தேதி அன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கி கேரளா வழியாக படிப்படியாக குமரிமுனை வரை பரவும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து, வரும் மே 22 ஆம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் “இன்று (19-05-2025) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது”.


























