இந்திய விமானப்படையில் 3500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
இந்திய விமானப்படையில் 3500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

அக்னிபாத் பிரிவின் கீழ் வரும் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படை சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 3500 பணியிடங்கள் காலிகா உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய விமானப்படையில் (IAF) 2024 ஆண்டில் அக்னிவீர்வாயு Intake 01 / 2025 பணிக்கென தோராயமாக 3500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு பணிக்கு 10ம் / 12ம் வகுப்பு, Diploma அல்லது Vocational Coruse-ஐ அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் 02.01.2004 அன்று முதல் 02.07.2007 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Test, Physical Fitness Test, Adaptability Test II மற்றும் Medical Fitness Test IAF மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 06.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்க்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!