மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 30% கூடுதல் – சூப்பர் நியூஸ்!

0
மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 30% கூடுதல் - சூப்பர் நியூஸ்!

மத்திய ஊழியர்களுக்கு சமீபத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு காரணமாக அவர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு விகிதத்தில் 30 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சம்பள உயர்வு:

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஜனவரி 1, 2024 முதலான தவணைக்குரிய அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அறிவிப்பின்படி நான்கு சதவீத அகவிலைப்படி கூடுதலாக வழங்கப்படுவதனால் அரசு ஊழியர்கள் மொத்தம் 50 சதவீத டி ஏ உயர்வை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 7 வது ஊதிய குழுவின் விதிகளின்படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விப்ரோ கம்பெனியில் காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வீட்டு வாடகை கொடுப்பனவானது ஊழியர்கள் குடியிருக்கும் நகரங்களுக்கு ஏற்ப X, Y மற்றும் Z என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எக்ஸ் பிரிவு நகரை சேர்ந்தவர்களுக்கு 30% ஹச் ஆர் ஏ, ஒய் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 20% மற்றும் இசட் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10% வீட்டு வாடகை கொடுப்பனவு உயர்த்தப்படும். இதனால் முறையே அரசு ஊழியர்கள் ரூபாய் 10,500, ரூபாய் 7000 மற்றும் ரூபாய் 3500 தொகையை மாதாந்திர சம்பளத்துடன் கூடுதலாக பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வுடன் வீட்டு வாடகை கொடுப்பனவு சேர்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!