ரயிலில் உங்களுக்கு பதிலாக வேறொருவர் பயணிக்கலாம் – ரயில்வே துறை அறிவிப்பு!

0
ரயிலில் உங்களுக்கு பதிலாக வேறொருவர் பயணிக்கலாம் - ரயில்வே துறை அறிவிப்பு!
ரயிலில் உங்களுக்கு பதிலாக வேறொருவர் பயணிக்கலாம் - ரயில்வே துறை அறிவிப்பு!
ரயிலில் உங்களுக்கு பதிலாக வேறொருவர் பயணிக்கலாம் – ரயில்வே துறை அறிவிப்பு!

ரயிலில் முன்பதிவு செய்து விட்டு கடைசி நேரத்தில் வேறொருவர் எப்படி பயணம் செய்வது என ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் பயணி:

தமிழகத்தில் முக்கிய பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களன்று பயணிகள் வெளியூர் செல்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடுகிறது. இவ்வாறு, டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு ஏதேனும் காரணத்தினால் பயணத்தை தொடர முடியவில்லையெனில் வேறொருவர் பெயரில் டிக்கெட்டை மாற்றம் செய்து பயணம் செய்யலாம். தற்போது எப்படி டிக்கெட்டில் இருக்கும் பெயரை மாற்றம் செய்து வேறொருவர் பயணம் செய்வது என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு – முடிவுக்கு வரும் விடுமுறை!

முன்பதிவு செய்த பயணி ரயில் பயணத்தை தொடர முடியாத பட்சத்தில் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் ஒன்றை வழங்க வேண்டும். அதாவது, எந்த காரணத்தினால் குறிப்பிட்ட தேதியில் பயணத்தை தொடர முடியவில்லை என்பதை தெளிவாக உள்ளிட்டு குடும்பத்தில் உள்ள யாருடைய பெயரிலாவது டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம். மேலும், குடும்பமாக சுற்றுலா செல்ல திட்டமிட்டு அல்லது மாணவர்கள் குழுவாக சேர்ந்து பயணம் செய்ய திட்டமிட்டு அதனை ரத்து செய்ய நேரிடும் சமயங்களில் 48 மணி நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் வழங்கி வேறொருவரின் பெயருக்கு மாற்றம் செய்யலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!