தமிழக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்த முடிவு – அமைச்சர் புதிய உத்தரவு!

0
தமிழக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்த முடிவு - அமைச்சர் புதிய உத்தரவு!
தமிழக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்த முடிவு - அமைச்சர் புதிய உத்தரவு!
தமிழக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்த முடிவு – அமைச்சர் புதிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் தரமான உணவுகளை தான் விற்பனை செய்கிறார்களா என ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஹோட்டல்களில் ஆய்வு:

தமிழகத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் கெட்டுப்போன உணவினையும் பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதனை, உட்கொள்ளும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்படுவதுடன் சில சமயங்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்து விடுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சவர்மா சாப்பிட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் உலுக்கியுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – உடனே பாருங்க!

இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவுகளை விற்பனை செய்ய கூடாது என தடை விதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் தூய்மையான முறையில் தான் உணவு சமைக்கிறார்களா எனவும், உணவினை பதப்படுத்த சரியான பிரீசிங் வசதி உள்ளனவா எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தூய்மையான முறையில் சமைக்காத உணவகம் மற்றும் தரமற்ற உணவினை விற்பனை செய்யும் உணவகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!