கனமழை எதிரொலி.. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் உத்திரபிரதேச மாநிலத்தில் பல முக்கிய பகுதிகள் நீரால் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
இந்தியாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தலைநகர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அக்.13ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி மின்னலுடன் பெய்த தொடர் மழையால் மின்னல் தாக்கி கடந்த 3 நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அம் மாநில நிவாரண ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மாநிலத்தின் கவுதம் புத்தா நகர் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் வெப்ப நிலையானது 10 டிகிரி வரை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இனி நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு – மத்திய அரசு புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
மேலும் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக 1 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் அக்.12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்