மகனின் ஊதியத்தில் 25% தாய்க்கு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

1
மகனின் ஊதியத்தில் 25% தாய்க்கு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
மகனின் ஊதியத்தில் 25% தாய்க்கு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
மகனின் ஊதியத்தில் 25% தாய்க்கு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25% தாய்க்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரிசு வேலை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரின் கணவர் திருமலை என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த போது இறந்துள்ளார். இவரது மகன் தேசிங்கு ராஜா என்பவருக்கு கருணை அடிப்படையில் அரசு பள்ளியில் கிளார்க் வேலை வழங்கப்பட்டது. இந்நிலையில் வள்ளியம்மாள் தன் மகன் தேசிங்கு ராஜா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், ‘கருணை அடிப்படையில் தேசிங்கு ராஜாவுக்கு வேலை அளித்த போது குடும்பத்தை கவனித்து கொள்வதாக கூறினார். ஆனால் தற்போது என்னை அடித்து துன்புறுத்துகிறான். குடும்பத்தையும் கவனிக்கவில்லை. இது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி தேசிங்கு ராஜாவை பணியிலிருந்து நீக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்!!

விசாரணையில், ‘மூத்த சகோதரிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்த வேலையினை தேசிங்கு ராஜாவுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். மனுதாரர் தேசிங்கு ராஜாவை பணியிலிருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார். நீதிமன்றம் அவ்வாறு செய்ய இயலாது. அதனால் மகன் பெறும் சம்பள ஊதியத்திலிருந்து 25% பிடித்தம் செய்யப்பட்டு தாய்க்கு வழங்கப்படும்’ எனக்கூறி இந்த வழக்கை ஜூன் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!