டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்!!
2020ஆம் ஆண்டின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை அடுத்து சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
நம் கைகளில் இருக்கும் தொழில்நுட்பம் நம்முடைய வேலைகள் அனைத்தையும் எளிதாக்கி விடுகிறது. உயர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியினால் எல்லாம் நம் கைகளுக்குள் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு கைபேசிகள், செயலிகள் நம் அன்றாட தேவைகளுக்கு ஏற்ற எளிய உபகரணங்களாக மாறி வருகிறது. இதன்படி டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அனைவரும் உபயோகிக்ககூடிய பொதுவான விஷயமாக இருக்கிறது.
ஒரு ரூபாய் துவங்கி பல கோடி ரூபாய்களும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம், ஒரு நபரின் வங்கி கணக்கிலிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படுகிறது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் அதிகளவு உபயோகிக்கப்படுகிறது என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. அதன் படி உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!!
சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், உடனடி பரிவர்த்தனைகள் மட்டும் 15.6% இருந்தது. மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 22.9% ஆக இருந்துள்ளது என ஏசிஐ வேர்ல்டுவைட் அறிக்கை கூறுகிறது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2025ஆம் ஆண்டிற்குள் 71.7% ஆக அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்