தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மழையால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை பணிகள்:
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை இரவு பகலாக கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. காணும் இடமெல்லாம் தேங்கியுள்ள நீரால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் மழையால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் மின் மோட்டார்கள், பாம்புகள் தானியங்கி கருவிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துள்ளது. தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகள் கவனத்திற்கு – பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்! வேளாண் இணை இயக்குனர் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து பாதிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழக மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.