தமிழகத்தில் இன்று (அக்.15) 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. முக்கிய எச்சரிக்கை!!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்டோபர் 15) சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த கனமழை அக்டோபர் 16 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் (அக்டோபர் 15) நாளையும் (அக்டோபர் 16) தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதி, வங்காள வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


























