தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்டு வானிலை நிலவி வரும் நிலையில் இன்று ஓரிரு சில பகுதிகளில் லேசான மழை பொழியலாம் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கனமழை:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே அதிக வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழியலாம் எனவும், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளையிலிருந்து காலை வேளையில் லேசான பனிமூட்டமும், அதற்கு பிறகு வறண்டு வானிலேயே நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பீர் தயாரிக்கும் ஆலைகளை மூட உத்தரவு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல, கடலோர பகுதிகளில் எந்தவித புயல் சின்னமும் உருவாகாத நிலையில் மீனவர்கள் வழக்கம்போல கடலுக்குள் மீன் பிடிக்க சொல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.