தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணத்தினால் இன்று நகரின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கனமழை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாகவே அதிகளவிலான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் தாக்கி கொண்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இந்த கூடுதல் வெப்பசலனத்தின் காரணத்தினால் நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருக்கிறது.
மேலும், ஜூன் 6 மற்றும் ஜூன் 7-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்க கூடும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஒரு சில மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அதிகமான ஈரப்பதம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.