மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வு – முக்கிய தகவல் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக்குழுவின் ஆலோசனையின் படி தான் வழங்கப்படுகிறது. இது குறித்த முக்கிய தகவல் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 வது ஊதியக்குழு:
நாடு முழுவதும் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.49 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆண்டிற்கு 2 முறை அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஏப்ரல் மாதத்தில் தான் 2023 ஜனவரிக்கான DA உயர்வு வழங்கப்பட்டது.
இதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மொத்தம் 42% DA மற்றும் DR பெற்று வருகின்றனர். DA உயர்வு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் DA உயர்வை ஊழியர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில், வரும் 2023 ஜூலை தவணைக்கான DA உயர்வு எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும், சமீபத்தில் தான் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை கணக்கிடுவதற்கான சூத்திரம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் கைகளில் எடுத்து செல்லக்கூடிய ஊதியத்தொகை ரூ.1,000 க்கு மேல் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.