தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று கூடுதல் வெப்ப சலனத்தின் காரணத்தினால் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

கனமழை:

தமிழகத்தில் கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதாவது, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை – காரணம் இது தான்.. அமைச்சர் விளக்கம்!

மேலும், சென்னை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வெப்பச்சலனத்தின் காரணத்தினால் ஈரப்பதம் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இந்த கடுமையான வெயிலுக்கு நடுவே அவ்வப்போது லேசான மழைப்பொழிவு இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!