மே 3 வரை 9 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
மே 3 வரை 9 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
மே 3 வரை 9 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
மே 3 வரை 9 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஹரியானா மாநில அரசு ஏப்ரல் 30ம் தேதி இரவு 10 மணி முதல் மே 3ம் தேதி காலை 5 மணி வரை 9 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு:

பஞ்ச்குலா, குருகிராம், ஃபரிதாபாத், சோனேபட், ரோஹ்தக், கர்னல், ஹிசார், சிர்சா மற்றும் ஃபதேஹாபாத் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவினை ஹரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த ஊரடங்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) இரவு 10 மணி முதல் திங்கள் (மே 3) அதிகாலை 5 மணி வரை செயல்படுத்தப்படும். இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். எந்தவொரு நபரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது. வாகன பயணத்தில் செல்லக்கூடாது அல்லது மேற்கூறிய மணிநேரங்களில் எந்தவொரு சாலை அல்லது பொது இடங்களிலும் நிற்கவோ அல்லது சுற்றவோ கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு பெற்றவர்கள் சட்டம் ஒழுங்கு, அவசரநிலைகள் மற்றும் நகராட்சி சேவை கடமைகள் மற்றும் COVID-19 தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இயக்கத்திலும், அரசு தேர்வுகளுக்கு செல்லும் நபர்களுக்கு எந்தவிதமான தடைகளும் இருக்காது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!