அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான சம்பள உயர்வு – மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ் இதோ!

0
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான சம்பள உயர்வு - மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ் இதோ!

ஹரியானா மாநில அரசானது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தில் 4 சதவீதத்தை உயர்த்தியுள்ளது.

சம்பள உயர்வு:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் சம்பள உயர்வை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசானது மார்ச் 15ம் தேதி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரண (DR) தொகையில் 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக இது தான் முக்கியமா? மிஸ் பண்ணிராதீங்க!

இத்தகைய DA, DR உயர்வானது ஜனவரி 1 2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி மார்ச் 2024 – க்கான ஊதியமானது ஏப்ரல் மாதத்திலும், ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024 – க்கான ஊதியமனது மே மாதத்திலும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதைப்போலவே மார்ச் 14ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% ஊதிய உயர்வும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியில் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!